உவரி அருகே பஞ்சாயத்து ஊழியர் தூக்கிட்டு தற்கொலை!

 

உவரி அருகே பஞ்சாயத்து ஊழியர் தூக்கிட்டு தற்கொலை!

நெல்லை

நெல்லை மாவட்டம் உவரி அருகே பஞ்சாயத்து ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம் திசையன்விளை வட்டம் உவரி அடுத்த ராமன்குடியை சேர்ந்தவர் கார்த்தீசன். இவரது மகன் வசந்தகுமார்(23). இவர் நவ்வலடி பஞ்சாயத்து அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், வசந்தகுமாருக்கு கடந்த சில நாட்களாக உடல்நல குறைவு ஏற்பட்டு வந்துள்ளது.

உவரி அருகே பஞ்சாயத்து ஊழியர் தூக்கிட்டு தற்கொலை!

இதற்காக அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் நோய் குணமடையவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்டு வந்த வசந்தகுமார், சம்பவத்தன்று ராமன்குடியில் உள்ள தனது தோட்டத்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த உவரி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திசையன்விளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து அவரது தந்தை கார்த்தீசன் அளித்த புகாரின் பேரில் உவரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.