“பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசுவது போன்ற ஈனச் செயல்” : அமைச்சர் ஜெயக்குமார்

 

“பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசுவது போன்ற ஈனச் செயல்” : அமைச்சர் ஜெயக்குமார்

கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் சிலர் காவி சாயம் ஊற்றி உள்ளனர். பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதை அறிந்து அப்பகுதியில் திக மற்றும் திமுகவினர் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

“பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசுவது போன்ற ஈனச் செயல்” : அமைச்சர் ஜெயக்குமார்

இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இதுபோன்ற விஷம செயல்களில் ஈடுப்பட்டது யார் என விசாரணையை தொடங்கியுள்ளனர். இதற்கு எம்பி கனிமொழி, பாமக ராமதாஸ் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

“பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசுவது போன்ற ஈனச் செயல்” : அமைச்சர் ஜெயக்குமார்

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் கோவை பெரியார் சிலை அவமதிப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர், “பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசுவது போன்ற ஈனச் செயல்களை ஏற்றுக் கொள்ள முடியாது” என்றார்.