கோவையில் பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றி அவமதிப்பு !

 

கோவையில் பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றி அவமதிப்பு !

கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் சிலர் காவி சாயம் ஊற்றி உள்ளனர். பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதை அறிந்து அப்பகுதியில் திக மற்றும் திமுகவினர் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இதுபோன்ற விஷம செயல்களில் ஈடுப்பட்டது யார் என விசாரணையை தொடங்கியுள்ளனர்.

கோவையில் பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றி அவமதிப்பு !

முன்னதாக கறுப்பர் கூட்டம் என்ற யூட்யூப் சேனலில் கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்ததாக எழுந்த புகாரில் அந்த இருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பெரியாரை அவதூறு செய்யும் செயலை இணையத்தில் பலரும் செய்துவருகிறார்கள். இதுகுறித்து திராவிடர் கழகம், மதிப்பிற்குரிய தலைவர்களை இழிவுபடுத்தும் கிருமிகள் மீது ஒரு சார்பாக சாயாமல் நடவடிக்கை எடுக்கவேண்டியது போலீசாரின் கடமை என சுட்டிக்காட்டியது கவனிக்கத்தக்கது.