பெரியாரின் கொள்கையால் அச்சமடைந்த நச்சுக் கிருமிகள், விஷப் பாம்புகள்! – ராமதாஸ் கண்டனம்

 

பெரியாரின் கொள்கையால் அச்சமடைந்த நச்சுக் கிருமிகள், விஷப் பாம்புகள்! – ராமதாஸ் கண்டனம்

பெரியாரின் கொள்கையால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக நச்சுக் கிருமிகள், விஷப் பாம்புகள் அவருடைய சிலை மீது காவி சாயத்தை ஊற்றி அவமரியாதை செய்துள்ளார்கள் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பெரியாரின் கொள்கையால் அச்சமடைந்த நச்சுக் கிருமிகள், விஷப் பாம்புகள்! – ராமதாஸ் கண்டனம்கோவையில் பெரியார் சிலை அவமரியாதை செய்யப்பட்டது தொடர்பாக பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், “கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியாரின் சிலை மீது சில நச்சுக்கிருமிகள் காவி சாயத்தை ஊற்றி அவமதிப்பு செய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. இதற்கு காரணமான விஷமிகள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரியாரின் கொள்கையால் அச்சமடைந்த நச்சுக் கிருமிகள், விஷப் பாம்புகள்! – ராமதாஸ் கண்டனம்
தந்தை பெரியாரின் சிலைகள் மட்டும் தொடர்ந்து அவமதிக்கப்படுகிறது என்றால், அவரது கொள்கைகள் தமிழகத்தில் கடந்த சில காலமாக ஊடுருவியுள்ள நச்சுக்கிருமிகள், விஷப்பாம்புகளை அச்சமடையச் செய்துள்ளன; அதன்விளைவு தான் இது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

http://


கொள்கை அடிப்படையில் எதிர்க்க துணிவில்லாத கொரோனாவை விட மோசமான இந்த நச்சுக்கிருமிகள் மிகவும் ஆபத்தானவர்கள்; சமுதாயத்தில் நஞ்சை பரப்புபவர்கள். அவர்களிடமிருந்து நமது பிள்ளைகளைக் காப்பதும், விழிப்புணர்வூட்டுவதும் தான் நமது முதல் கடமையாக இருக்க வேண்டும்.
கொள்கை அடிப்படையில் எதிர்க்க முடியாத ஒருவரின் சிலையை அவமதிப்பதும், சாயத்தை ஊற்றுவதும் கோழைத்தனமான செயல்கள். கடந்த காலங்களில் இத்தகைய செயல்களால் எதையும் சாதிக்க முடியவில்லை; இனியும் சாதிக்க முடியாது என்பதை கோழைகள் உணர வேண்டும்!” என்று கூறியுள்ளார்.