திண்டுக்கல் அருகே பால் வியாபாரி வெட்டி கொலை – போலீசார் விசாரணை!

 

திண்டுக்கல் அருகே பால் வியாபாரி வெட்டி கொலை – போலீசார் விசாரணை!

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே பால் வியாபாரி மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஆலமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகேன். பால் வியாபாரி. இவரது மனைவி பாப்பாத்தி. இவர்களுக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், நேற்று இரவு முருகேசன் பால் விநியோகம் செய்து விட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.

திண்டுக்கல் அருகே பால் வியாபாரி வெட்டி கொலை – போலீசார் விசாரணை!

மாலப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, அங்கு முருகேசனை வழிமறித்த மர்மநபர்கள் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அவரை வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மேலும், திண்டுக்கல் மாவட்ட ஏடிஎஸ்பி சந்திரன் கொலை நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். தொடர்ந்து, இந்த கொலை சம்பவம் குறித்து, திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை தேடி வருகின்றனர்.