கோத்தகிரியில் கள்ளக்காதலியை கொலை செய்து, காதலன் தற்கொலை!

 

கோத்தகிரியில் கள்ளக்காதலியை கொலை செய்து, காதலன் தற்கொலை!

நீலகிரி

நீலகிரி அருகே இரண்டாவது திருமணம் செய்ய வற்புறுத்திய கள்ளக்காதலியை கொலை செய்துவிட்டு, காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி குண்டாடா பிரிவை சேர்ந்தவர் அமுதா (43). திருமணமான இவருக்கும், திருச்சிக்கடியை சேர்ந்த அவரது தங்கை கணவர் புஷ்பராஜுக்கும் இடையே முறையற்ற உறவு இருந்து வந்ததுள்ளது. இதனால், புஷ்பராஜூக்கு 2 ஏக்கர் தேயிலை தோட்டத்தை குத்தகைக்கு எடுக்க, பண உதவி செய்த அமுதா, அவருடனே வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 5ஆம் தேதி அன்று அமுதா வீட்டில் இருந்து திடீரென மாயமாகினார். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் கோத்தகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் புஷ்பராஜிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தனக்கு அவர் மாயமானது குறித்து தெரியாது என புஷ்பராஜ் தெரிவித்துள்ளார்.

கோத்தகிரியில் கள்ளக்காதலியை கொலை செய்து, காதலன் தற்கொலை!

இந்த நிலையில், நேற்று முன்தினம் புஷ்பராஜ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே, அமுதாவின் செல்போன் சிக்னலை வைத்து தேடிய போது, அவர் புஷ்பராஜ் வீட்டின் அருகேயுள்ள மரத்தில் தூக்கில் அழுகிய நிலையில் சடலமாக தொங்கியது தெரியவந்தது. உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசார், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அமுதா தன்னை 2-வது திருமணம் செய்யும் படி வற்புறுத்தியதால் ஆத்திரமடைந்த புஷ்பராஜ், அவரை கழுத்தை நெரிந்து கொலை செய்துவிட்டு, பின்னர் வீட்டின் அருகேயுள்ள மரத்தில் தூக்கில் தொங்கவிட்டது தெரியவந்தது. மேலும், போலீசாரின் விசாரணையில், உண்மை வெளிவந்து விடும் என பயந்து அவர் தற்கொலை செய்தது கொண்டதும் தெரியவந்தது.