கேரளாவில் விமான விபத்து : அவரச உதவி எண்கள் அறிவிப்பு!
துபாயிலிருந்து கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும்போது நேற்று விபத்திற்குள்ளானது. 191 பேர் பயணித்த இந்த விமான விபத்தில் விமானி டி.எம்.சாதே , துணை விமானி, குழந்தை உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 173 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 190 பேர் பயணித்த விமானத்தில் 15 பேர் கவலைக்கிடமாக உள்ளதாகவும், 120 பேர் லேசான காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
துபாயிலிருந்து வந்த விமானம் கோழிக்கோடு டேபிள் டாப் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஏற்பட்டமோசமான வானிலை காரணமாக விமானம் விபத்தில் சிக்கியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.அதே சமயம் கனமழை காரணமாக தான் விமானம் கீழே விழுந்தும் தீப்பற்றாமல் இருந்துள்ளது.
Helplines are open. #CCJaccident
These numbers will assist you in providing information about passengers who were on the Air india Express AXB1344 from @DXB to CCJ.
Airport Control Room – 0483 2719493
Malappuram Collectorate – 0483 2736320
Kozhikode Collectorate – 0495 2376901 pic.twitter.com/aPjh8ujav4— Pinarayi Vijayan (@vijayanpinarayi) August 7, 2020
இந்நிலையில் விபத்துக்குள்ளானவர்களின் விவரங்களை அறிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்புகொள்ளும் வகையில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அவசர உதவி எண்களை அறிவித்துள்ளார். அதேபோல மத்திய அரசும் அவசர உதவி எண்களை வெளியிட்டுள்ளது.
Three more helpline numbers have been added. Contact these numbers for information on passengers of Air india flight AXB1344 (@DXB to Kozhikode International airport – CCJ)
Kozhikode Control Room
0495 2376900
0495 2376901
0495 2376902 pic.twitter.com/BNUJ1zR3kw— Pinarayi Vijayan (@vijayanpinarayi) August 7, 2020