கேரள விமான விபத்தில் 20 பேர் மரணம்: 2 விமானிகளும் உயிரிழப்பு

 

கேரள விமான விபத்தில் 20 பேர் மரணம்: 2 விமானிகளும் உயிரிழப்பு

ந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து இந்தியர்களை கேரளா அழைத்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. ஓடுதளத்தை விட்டு விலகி ஓடி 35 அடி பள்ளத்தில் பாய்ந்து இரண்டாக உடைந்தது. இந்த விபத்தில் 2 விமானிகள் உள்பட 20 பேர் உயிரிழந்தனர். 112 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்த நேற்று இரவு 9.30 மணி அளவில் ஒரு விமானி உள்பட 3 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வந்தது. அதன்பின்னர் உயிரிழப்பு 14 ஆக அதிகரித்தது. இரவு 11.45 மணிக்கு மேல் உயிரிழப்பு 17 ஆக அதிகரித்தது.

இந்நிலையில் உயிரிழப்பு 20 ஆக அதிகரித்துள்ளது.