கந்த சஷ்டி விவகாரம்: ‘கறுப்பர் கூட்டம்’ சுரேந்திரன் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல்!

 

கந்த சஷ்டி விவகாரம்: ‘கறுப்பர் கூட்டம்’ சுரேந்திரன் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல்!

இந்துக்களின் கடவுளர்கள் மற்றும் புராணங்கள் தொடர்பாக பல்வேறு வீடியோக்களை கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் வெளியிட்டு வருகிறது. அதனால், அந்த யூடியூப் சேனலை தடை செய்யவேண்டும் என்றும், சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என பா.ஜ.க சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.

கந்த சஷ்டி விவகாரம்: ‘கறுப்பர் கூட்டம்’ சுரேந்திரன் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல்!

அந்த புகாரில், இந்துக்கள் வழிபடும் கடவுளை ஆபாசமாகப் பேசியும் கந்த சஷ்டி குறித்து தவறான கருத்துக்களை பேசியும் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி வீடியோ வெளியிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த சேனலை இஸ்லாமியர் நடத்துவதாக பா.ஜ.க குற்றம்சாட்டியுள்ளது. இதையடுத்து சாதி, மத, இன- மொழி ரீதியிலான மோதலை தூண்டுவதாக கருப்பர் கூட்டம் இணையதள சேனல் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கந்த சஷ்டி விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

கந்த சஷ்டி விவகாரம்: ‘கறுப்பர் கூட்டம்’ சுரேந்திரன் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல்!

இந்த நிலையில், கந்த சஷ்டி விவகாரத்தில் கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், வலதுசாரி சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து பணியாற்றி வருவதால் அதை முடக்கும் நோக்கில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.