சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தால் அதிமுகவிற்கு தலைமை ஏற்பார்- கார்த்திக் சிதம்பரம்

 

சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தால் அதிமுகவிற்கு தலைமை ஏற்பார்- கார்த்திக் சிதம்பரம்

சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தால் அதிமுகவிற்கு அவரே தலைமை ஏற்பார் என சிவகங்கை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஆம்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திக் சிதம்பரம், “கோவையில் பெரியார் சிலை மீது காவி சாயத்தை பூசியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரியாருடைய கொள்கைகள் அவருடைய முற்போக்கு சிந்தனைகளை எதிர்ப்பவர்கள் தான் கீழ்தரமான செயலில் ஈடுபட்டிருக்கிறார்கள். முருகனை அவ மரியாதை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் வழங்கும் முருகனை கொச்சைப்படுத்துவது என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இதை வன்மையாக கண்டிக்கிறேன். அதற்கு அந்த அமைப்பு மன்னிப்பு கேட்டு இருக்கிறது என்று நினைக்கிறேன் அது உண்மையாக இருந்தால் இதோடு அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தால் அதிமுகவிற்கு தலைமை ஏற்பார்- கார்த்திக் சிதம்பரம்

சசிகலா வெளியே வர சட்டத்தில் இடமிருந்தால் விடுதலை ஆகி வருவார். என்னைபொருத்தவரை விடுதலையாகி வந்தால் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தலைமை அவர் கைக்கு சென்றுவிடும். கட்சியின் கட்டுப்பாட்டை அவர் கையில் எடுத்து கொள்வார். தினகரன் மீண்டும் கட்சிக்கு வருவார். அவர்களுடைய குடும்பத்துக்கு கட்சி சென்றுவிடும் ” என தெரிவித்தார்.