கன்னியாகுமரியில் மேலும் 145 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
Jul 18, 2020, 08:17 IST1595040438000
தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,538பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,60,907 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று மட்டும் 79 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,315ஆக அதிகரித்துள்ளது. இதனால் சென்னை உள்பட சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் 83,377 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கன்னியாகுமரியில் மேலும் 145 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 2,237 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அங்கு குணமாகி வீடு திரும்பியவர் எண்ணிக்கை 815 ஆக அதிகரித்துள்ளது.