ஜெயலலிதாவின் “வேதா நிலையம்” இல்லத்தை நினைவிடமாக மாற்ற தடையில்லை!

 

ஜெயலலிதாவின் “வேதா நிலையம்” இல்லத்தை நினைவிடமாக மாற்ற தடையில்லை!

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு பின்னர், அவர் வசித்து வந்த போயஸ் தோட்டம் இல்லம் நினைவு இடமாக மாற்றப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆனால் ஜெயலலிதாவின் உறவினரான தீபா, போயஸ் இல்லத்தை நினைவிடமாக்க ஒப்புக்கொள்ளவில்லை. இதனை எதிர்த்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். அந்த வழக்கு தொடரப்பட்டதன் இடையே, போயஸ் இல்லத்தை ஜெயலலிதாவின் நினைவிடமாக மாற்றுவதற்கு அனைத்து முயற்சிகளையும் அரசு தீவிரப்படுத்தி, அந்த நிலத்தையும் கையகப்படுத்த முயற்சி செய்தது. இதையடுத்து ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்தது.

ஜெயலலிதாவின் “வேதா நிலையம்” இல்லத்தை நினைவிடமாக மாற்ற தடையில்லை!

இதை தொடர்ந்து வேதா நிலைய இல்லத்தை நினைவிடமாக மாற்றினால் அங்கு வசிக்கும் தங்களுக்கு இடையூறாக இருக்கும் என்று போயஸ் கார்டன் பகுதி குடியிருப்போர் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

ஜெயலலிதாவின் “வேதா நிலையம்” இல்லத்தை நினைவிடமாக மாற்ற தடையில்லை!

இந்நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக்குவதற்கு எதிரான வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. போயஸ் கார்டன் பகுதி குடியிருப்போர் சங்கம் சார்பில் தொடரப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்ததின் மூலம் “வேதா நிலையம்” இல்லத்தை நினைவிடமாக மாற்ற தடையில்லை என்பது உறுதியாகியுள்ளது.