சிறை கைதிகளுக்கு ஆன்லைனில் யோகா பயிற்சி அளிக்கும் ஈஷா யோகா மையம்!

 

சிறை கைதிகளுக்கு ஆன்லைனில் யோகா பயிற்சி அளிக்கும் ஈஷா யோகா மையம்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா பரவல் குறைய தொடங்கிய நிலையில் மற்ற மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை கூடி வருகிறது. கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதில் இருந்து மக்களை காக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.பொதுமக்கள் மட்டுமின்றி சிறையில் உள்ள கைதிகளை கூட கொரோனா தொற்று விட்டு வைக்கவில்லை.

சிறை கைதிகளுக்கு ஆன்லைனில் யோகா பயிற்சி அளிக்கும் ஈஷா யோகா மையம்!

தமிழகத்தில் கடலூர் மத்திய சிறை, சென்னை புழல் சிறை உள்ளிட்ட சிறைகளில் கைதிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிறப்பு முகாமில் சிகிச்சை பெற்று வந்தனர். அத்துடன் கொரோனாவால் குடும்ப உறுப்பினர்களை சந்திக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

சிறை கைதிகளுக்கு ஆன்லைனில் யோகா பயிற்சி அளிக்கும் ஈஷா யோகா மையம்!

இந்நிலையில் ஈஷா யோகா மையம் சிறை கைதிகளுக்கு ஆன்லைன் மூலம் யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது . கொரோனா காலக்கட்டத்தில் உடல் மற்றும் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு பயிற்சி அளிக்க சிறைத்துறை உயரதிகாரிகள் வேண்டுகோள் விடுத்த நிலையில் ஆன்லைன் மூலம் யோகா பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது.