கோழிக்கோடு விமான விபத்து : நடிகர் சூர்யா இரங்கல்!
துபாயில் இருந்து 191 பயணிகளுடன் கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கடந்த சில தினங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கியதில் சுமார் 18 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 15 பேர் கவலைக்கிடமாக 120 பேர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதில் விமான விபத்தில் இருவருக்கு கு கொரோனா தொற்று உறுதியானதால் மீட்பு பணியில் ஈடுப்பட்டவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் என 600 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
My deep condolences to the grieving families… Prayers for speedy recovery of the injured! Salutes to the people of Malappuram & Respects to the pilots 🙏🏼 #flightcrash
— Suriya Sivakumar (@Suriya_offl) August 11, 2020
இந்நிலையில் இதுகுறித்து நடிகர் சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில், “தூக்கத்தில் ஆழ்ந்துள்ள குடும்பங்களுக்கு என் இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர் விரைவில் நலம் பெற பிரார்த்திக்கிறேன். காயமடைந்தவர்களை விரைவாக மீட்ட மலப்புரம் மக்களுக்கும், விமானிகளுக்கும் தலைவணங்குகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.