விமான விபத்தில் உயிரிழந்த பயணிக்கு கொரோனா! – அனைவரையும் தனிமைப்படுத்த கேரளா உத்தரவு

 

விமான விபத்தில் உயிரிழந்த பயணிக்கு கொரோனா! – அனைவரையும் தனிமைப்படுத்த கேரளா உத்தரவு

கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த பயணி ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், விமானத்தில் பயணம் செய்த அனைவரையும் தனிமைப்படுத்த அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

விமான விபத்தில் உயிரிழந்த பயணிக்கு கொரோனா! – அனைவரையும் தனிமைப்படுத்த கேரளா உத்தரவு
நேற்று கோழிக்கோட்டில் தரை இறங்கிய விமானம் ஓடுபாதையில் நிறைந்திருந்த தண்ணீர் காரணமாக விபத்துக்குள்ளானது. விமானிகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான ஆய்வுகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் உயிர் தப்பிய பயணிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர்.

விமான விபத்தில் உயிரிழந்த பயணிக்கு கொரோனா! – அனைவரையும் தனிமைப்படுத்த கேரளா உத்தரவு

அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதே போல் உயிரிழந்த பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஒருவருக்கு கொரோனா இருந்தது உறுதியானதாக கூறப்படுகிறது.

விமான விபத்தில் உயிரிழந்த பயணிக்கு கொரோனா! – அனைவரையும் தனிமைப்படுத்த கேரளா உத்தரவு
இதைத் தொடர்ந்து விமான விபத்தில் உயிர் தப்பிய பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதே போல், விமான விபத்து நிகழ்ந்த இடத்தை ஒட்டியுள்ள கிராமமும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சைஷலா பிறப்பித்துள்ளார்.