முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி !
கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் உருவான கொரோனா தொற்று பல உலக நாடுகளை கடந்த 8 மாதமாக படாதப்பாடு படுத்தி வருகிறது. இந்தியாவிலும் தொற்று எண்ணிக்கை 22 லட்சத்தை கடந்துள்ளது.
இந்நிலையில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரணாப் முகர்ஜி வழக்கமான உடல் பரிசோதனைக்காக மருத்துவமனை சென்ற நிலையில் அவருக்கு அங்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதற்கான முடிவு இன்று வெளியான நிலையில் அதில் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
On a visit to the hospital for a separate procedure, I have tested positive for COVID19 today.
I request the people who came in contact with me in the last week, to please self isolate and get tested for COVID-19. #CitizenMukherjee— Pranab Mukherjee (@CitiznMukherjee) August 10, 2020
அவருக்க அறிகுறிகள் ஏதும் இல்லாததால் கடந்த வாரம் பிரணாப் முகர்ஜியை சந்திக்க பலர் வந்து சென்றுள்ளனர். இதனால் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள பிரணாப் முகர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஏற்கனவே மத்திய, மாநில அமைச்சர்கள், எம்எல்ஏ -க்கள் என பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.