புதுச்சேரியில் மேலும் 200 பேருக்கு கொரோனா தொற்று: மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,806 ஆக உயர்வு!
Aug 2, 2020, 11:29 IST1596347949000
இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 17,50,723 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 11.45 லட்சம் பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37,364 ஆக அதிகரித்துள்து என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது .
இந்தியாவில் 24 மணிநேரத்தில் 54,735 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 764 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், புதுச்சேரியிலும் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் புதுச்சேரியில் மேலும் 200 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,806 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,445 பேர் குணமடைந்த நிலையில் 52 பேர் பலியாகியுள்ளனர்.