தனியார் கல்லூரி விடுதியில், மேலாளர் தூக்கிட்டு தற்கொலை!

 

தனியார் கல்லூரி விடுதியில், மேலாளர் தூக்கிட்டு தற்கொலை!

நாமக்கல்

பரமத்தி வேலூர் அருகே தனியார் கல்லூரி விடுதியில் மேலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகேயுள்ள பரமத்தி பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர், அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர் விடுதியில் மேலாளராக பணி புரிந்து வந்தார்.

தனியார் கல்லூரி விடுதியில், மேலாளர் தூக்கிட்டு தற்கொலை!

இந்த நிலையில், நேற்று காலை ஈஸ்வரன் விடுதி அறை நீண்ட நேரமாக திறக்காமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள் ஜன்னல் வழியாக பார்த்த போது, அவர் மின்விசிறியில் தூக்கில் சடலமாக தொங்கினார். இதுகுறித்து அவர்கள் பரமத்தி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து ஈஸ்வரன் உறவினர்கள் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.