மகள் காதல் திருமணம் செய்ததால் வேதனை… தாய் விஷம் குடித்து தற்கொலை…

 

மகள் காதல் திருமணம் செய்ததால் வேதனை… தாய் விஷம் குடித்து தற்கொலை…

விருதுநகர்

சிவகாசியில் மகள் காதல் திருணம் செய்ததால் மனமுடைந்த தாய் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அனந்தப்ப நாடார் தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜன் (51). இவருக்கு கார்த்தீஸ்வரி என்ற மனைவியும், கோகிலா (19) என்ற மகளும் உள்ளனர். கோகிலா அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

மகள் காதல் திருமணம் செய்ததால் வேதனை… தாய் விஷம் குடித்து தற்கொலை…

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கோகிலா வீட்டில் இருந்து வெளியேறி விக்னேஷை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் கார்த்தீஸ்வரி மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது அவர் பூச்சிமருந்தை குடித்து தற்கொலை செய்துகொணடார்.

தகவல் அறிந்த சிவகாசி டவுன் போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.