“கிரிக்கெட் உலகில் தவிர்க்க முடியாத சக்தி தோனி” : தோனியை புகழ்ந்து பிரதமர் மோடி கடிதம்!

 

“கிரிக்கெட் உலகில் தவிர்க்க முடியாத சக்தி தோனி” : தோனியை புகழ்ந்து பிரதமர் மோடி கடிதம்!

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற தோனிக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற தோனி கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று அறிவித்தார். தோனியின் இந்த அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து தோனி ஓய்வு குறித்து பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

“கிரிக்கெட் உலகில் தவிர்க்க முடியாத சக்தி தோனி” : தோனியை புகழ்ந்து பிரதமர் மோடி கடிதம்!

இந்நிலையில் இந்திய முன்னாள் கேப்டன் தோனிக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். அதில், “கிரிக்கெட் உலகில் தவிர்க்க முடியாத சக்தி தோனி. வெற்றியோ தோல்வியோ எல்லா நேரங்களிலும் அமைதியைக் கடைப்பிடித்து சிறந்து விளங்கியவர் தோனி.

“கிரிக்கெட் உலகில் தவிர்க்க முடியாத சக்தி தோனி” : தோனியை புகழ்ந்து பிரதமர் மோடி கடிதம்!

தோனியின் ஓய்வு முடிவு 130 கோடி மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிறிய நகரில் பிறந்து இந்தியாவின் அடையாளமாக மாறியவர் தோனி. கடந்த 15 ஆண்டுகளில் இந்திய அணிக்கு மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கி உள்ளீர்கள்.

“கிரிக்கெட் உலகில் தவிர்க்க முடியாத சக்தி தோனி” : தோனியை புகழ்ந்து பிரதமர் மோடி கடிதம்!

சிக்ஸர் விளாசி 2011 உலகக்கோப்பையை வென்று தந்த தருணங்கள் மனதில் எப்போதும் நிலைத்திருக்கும்” என்று தோனியை புகழ்ந்துள்ள மோடி, ராணுவத்தில் பணியாற்றிய போது தோனி மகிழ்ச்சிகரமாக இருந்ததாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.