’ஓய்வு அறிவிப்பு … அழுகை… தோனி’ சின்ன தல ரெய்னா ஷேரிங்

 

 ’ஓய்வு அறிவிப்பு … அழுகை… தோனி’ சின்ன தல ரெய்னா ஷேரிங்

கடந்த சனிக்கிழமை கிரிக்கெட் ரசிகர்களின் மிக சோகமான தினம். கிரிக்கெட் விளையாட்டு தெரியாதவர்களுக்குக்கூட தெரிந்த பெயர் மஹேந்திர சிங் தோனி.

எங்கேனும் டிவியில் கிரிக்கெட் ஓடிக்கொண்டிருந்தால் சச்சின் அவுட்டாகும் வரை பார்ப்பது என்பது மாறி, தோனி அவுட்டாகும் வரை பார்ப்பது என்ற நிலையை உருவாக்கியவர் தோனி.

 ’ஓய்வு அறிவிப்பு … அழுகை… தோனி’ சின்ன தல ரெய்னா ஷேரிங்

தோனி சர்வேதப் போட்டிகளில் ஆடுவதிலிருந்து ஓய்வை அறிவித்தார் தோனி. கிரிக்கெட் ரசிகர்கள் கடந்த ஆறுமாதமாக இதை யூகித்திருந்தாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு அவர்களைக் கலங்க வைத்தது.

தோனியின் ஓய்வு எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சின்ன தல சென்னை ரசிகர்களால் கொண்டாடப்படும் அதிரடி கிரிக்கெட்டர் சுரேஷ் ரெய்னாவும் அன்றைய தினம் ஓய்வை அறிவித்தார். இதை எவருமே எதிர்பார்க்க வில்லை.

 ’ஓய்வு அறிவிப்பு … அழுகை… தோனி’ சின்ன தல ரெய்னா ஷேரிங்

சுரேஷ் ரெய்னா இந்திய அணிக்கு மிகப் பெரிய நம்பிக்கை நட்சத்திரம். மிடில் ஆர்டரில் இந்திய அணிக்கு எப்போதுமே சரியான வீரர்கள் அமைதில் சிக்கல் ஏற்படும். அதைப் போக்கும் விதத்தில் யுவராஜ் சிங்கோடு கைகோர்த்தவர்தான் சுரேஷ் ரெய்னா.

சுரேஷ் ரெய்னா களத்தில் நின்றால் ரன் மழை பொழியும். நின்று நேரம் கடத்துவது என்ற பேச்சே ரெய்னாவுக்குப் பிடிக்காது. அவரின் ஓய்வும் தோனியும் ஓய்வும் இந்தியாவின் மிடில் ஆர்டரை நிச்சயம் பாதிக்கும்.

 ’ஓய்வு அறிவிப்பு … அழுகை… தோனி’ சின்ன தல ரெய்னா ஷேரிங்

இந்நிலையில் சுரேஷ் ரெய்னா ஒரு பேட்டியில், ’தீபக் சாகர், கரண் ஷர்மா, பியூஷ் சாவ்லாவுடன் ராஞ்சிக்குச் சென்றோம். அங்கே தோனியையும் மோனு சிங்கையும் அழைத்துசென்றோம். தோனி ஓய்வை தெரிவிப்பார் என்று முன்பே தெரியும். அதனால், நானும் ரெடியாக இருந்தேன். ஓய்வை அறிவித்தது, கட்டிப்பிடித்து அழுதோம்’ என்று தெரிவித்திருக்கிறார்.