மகன் இறந்த வேதனையில் தந்தை தூக்கிட்டு தற்கொலை!

 

மகன் இறந்த வேதனையில் தந்தை தூக்கிட்டு தற்கொலை!

வேலூர்

வேலூர் அருகே மகன் இறந்த வேதனையில் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம் பொய்கை மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர். கட்டிட மேஸ்திரி. இவரது மகன் ராணுவத்தில் பணிபுரிந்து வந்து நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். மகன் இறப்பால் மனமுடைந்த ஶ்ரீதர், கடும் மனவேதனையில் இருந்து வந்தார்.

மகன் இறந்த வேதனையில் தந்தை தூக்கிட்டு தற்கொலை!

இந்த நிலையில், நேற்று மேல்பாடி அடுத்த திகுவப்பள்ளி பகுதியில் உள்ள தனது உறவினரை பார்ப்பதற்காக அவர் சென்றிருந்தார். மகனின் இழப்பால் வாழ்வில் விரக்தியடைந்த ஶ்ரீதர், அங்குள்ள புளிய மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்டு, அந்த பகுதி மக்கள் மேல்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

அதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஶ்ரீதரின் உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.