மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு, தாய் தற்கொலை முயற்சி!

 

மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு, தாய் தற்கொலை முயற்சி!

திருச்சி

மணப்பாறை அருகே மகளுக்கு எலி மருந்து கொடுத்து விட்டு, தாயும் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில், சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கொட்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கீர்த்திகா. இவருக்கும், பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரை சேர்ந்த கணேசன் என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கமலிகா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கீர்த்திகா, கணவரை பிரிந்து, பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு, தாய் தற்கொலை முயற்சி!

இதனிடையே, திருமண வாழ்வில் விரக்தியடைந்து காணப்பட்ட அவர், தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். இதனையடுத்து, நேற்று மகளுக்கு எலி மருந்து கொடுத்து விட்டு, தானும் குடித்து தற்கொலைக்கு முயன்றார். வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு சிறுமி கமலிகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கீர்த்திகாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம், குறித்து புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.