நில தகராறில் விவசாயி தலையில் கல்லைப்போட்டு படுகொலை… அண்ணன், அண்ணி கைது…

 

நில தகராறில் விவசாயி தலையில் கல்லைப்போட்டு படுகொலை… அண்ணன், அண்ணி கைது…

நாமக்கல்

நாமக்கல் அருகே நில தகராறில் விவசாயி தலையில் கல்லைப்போட்டு படுகொலை செய்த வழக்கில் அண்ணன் மற்றும் அண்ணியை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் அருகே உள்ள கல்யாணி கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல். இவரது தம்பி அண்ணாதுரை. இவர்கள் தங்களுடைய பூர்வீக சொத்தான 12 ஏக்கர் நிலத்தில் கூட்டாக விவசாயம் செய்து வந்தனர். இந்த நிலையில், பழனிவேல் 4.5 ஏக்கர் நிலத்தை, தனது மனைவி பழனியம்மாளின் பெயருக்கு பட்டா மாறுதல் செய்ததாக கூறப்படுகிறது.

இதன் மூலம் அவர் கூட்டுறவு வங்கியில் கடனும் பெற்றிருந்தார். அரசின் கடன் தள்ளுபடி அறிவிப்பின்போது நிலத்தின் பட்டா மாற்றப்பட்டது அண்ணாதுரைக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவர், பழனிவேலிடம் கேட்டபோது, இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு உள்ளது.

நில தகராறில் விவசாயி தலையில் கல்லைப்போட்டு படுகொலை… அண்ணன், அண்ணி கைது…

இதில் ஆத்திரமடைந்த பழனிவேல் மற்றும் பழனியம்மாள் ஆகியோர் கடந்த புதன்கிழமை இரவு வீட்டில் தனியாக இருந்த அண்ணாதுரையை, தலையில் கல்லைபோட்டு படுகொலை செய்தனர்.வெளியூருக்கு சென்று திரும்பிய அண்ணாதுரையின் மனைவி, கணவர் சடலமாக கிடந்ததை கண்டு, புதுச்சத்திரம் போலீசாருக்கு தகவல் அளித்தார்.

உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் பழனிவேல் மற்றும் பழனியம்மாள் ஆகியோர் கொலை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து நேற்று அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.