கள்ளக்காதல் விவகாரத்தில், கட்டிட தொழிலாளி வெட்டிக் கொலை!

 

கள்ளக்காதல் விவகாரத்தில், கட்டிட தொழிலாளி வெட்டிக் கொலை!

மதுரை

மதுரை அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் கட்டிட தொழிலாளி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டம் நிலையூர் கிராமத்தை சேர்ந்தவர் நந்தகுமார். கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி முனீஸ்வரி என்ற மனைவியும், 6 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில், நந்தகுமார் இன்று காலை தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.

வீட்டில் இருந்து சிறிது தூரம் சென்றபோது அவரை அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வழிமறித்து மர்மநபர்கள் சரமாரியாக வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பியோடினர். இதில் பலத்த காயமடைந்த நந்தகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

கள்ளக்காதல் விவகாரத்தில், கட்டிட தொழிலாளி வெட்டிக் கொலை!

மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் நந்தகுமாருக்கு, அதே பகுதியை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது தெரியவந்துள்ளது. எனவே கள்ளத்தொடர்பு காரணமாக கொலை நடைபெற்றதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.