காஞ்சிபுரத்தில் முன்விரோதம் காரணமாக ரவுடி வெட்டிக்கொலை!

 

காஞ்சிபுரத்தில் முன்விரோதம் காரணமாக ரவுடி வெட்டிக்கொலை!

காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் முன்விரோதம் காரணமாக ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், 2 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

காஞ்சிபுரம் தாயார் அம்மன் குளம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி சூலைகருப்பு என்ற வடிவேல். இவர் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், நேற்று காலை வீட்டில் இருந்து கடைக்கு சென்று கொண்டிருந்த வடிவேலை, மர்மநபர்கள் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர்.

காஞ்சிபுரத்தில் முன்விரோதம் காரணமாக ரவுடி வெட்டிக்கொலை!

இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் அளித்த தகவலை தொடர்ந்து, காஞ்சிபுரம் டிஎஸ்பி மணிமேகலை தலைமையில் சிவகாஞ்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, உடலை பிரேத பரிசோதனைக்காக காஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அதே பகுதியை சேர்ந்த செல்வம் மற்றும் சதீஷ் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றது தெரிய வந்தது.