தளியில் முன்விரோதம் காரணமாக, பிரபல ரவுடி வெட்டிக்கொலை!

 

தளியில் முன்விரோதம் காரணமாக, பிரபல ரவுடி வெட்டிக்கொலை!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே பிரபல ரவுடி நரேஷ் என்பவர், மர்ம கும்பலால் வெட்டிக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அடுத்த குருபரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் நரேஷ் (29). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், நேற்றிரவு நரேஷ், தளி உருதுபள்ளி அருகில் உணவகத்தில் சாப்பாடு பார்சல் வாங்கி கொண்டிருந்தார்.

தளியில் முன்விரோதம் காரணமாக, பிரபல ரவுடி வெட்டிக்கொலை!

அப்போது, இருசக்கர வாகனங்களில் அங்கு வந்த மர்மநபர்கள், கத்தி – அரிவாள் உள்ளிட்ட பயரங்கர ஆயுதங்களால் நரேஷை வெட்டினர். இதனால் அதிர்ச்சியடைந்த நரேஷ் தப்பியோட முயன்றபோது, அந்த கும்பல் விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து தேன்கனிகோட்டை டிஎஸ்பி முரளி தலைமையில், தளி போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். பின்னர், பிரேத பரிசோதனைக்காக உடலை தேன்கனிகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து கொலை வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.