தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1.20 லட்சம் பேருக்கு இ-பாஸ்!

 

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1.20 லட்சம் பேருக்கு இ-பாஸ்!

கொரோனாவை கட்டுபடுத்தும் வழிமுறைகளில் ஒன்றாக இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டது. ஆனால் இதனால் பொதுமக்கள் அவதிப்படுவதாக புகார் எழுந்தது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1.20 லட்சம் பேருக்கு இ-பாஸ்!

இதை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பித்த உடனே இபாஸ் கிடைக்கும் நடைமுறை நேற்று  முதல் நடைமுறைக்கு வந்தது. இதனால விண்ணப்பிக்கும் அனைவருக்கும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அனுமதி கிடைக்க தொடங்கியது. இது பொது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1.20 லட்சம் பேருக்கு இ-பாஸ்!

இந்நிலையில் நேற்று ஒரேநாளில் 1.20 லட்சம் பேருக்கு இ பாஸ் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனால் சென்னையிலிருந்து வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாவட்டங்களிலிருந்து சென்னைக்கும் பலரும் வருகை புரிந்துள்ளனர்.