கன்னியாகுமரி அருகே பொறியாளர் தூக்கிட்டு தற்கொலை!

 

கன்னியாகுமரி அருகே பொறியாளர் தூக்கிட்டு தற்கொலை!

கன்னியாகுமரி

கன்னியாகுமரி அருகே பொறியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகேயுள்ள மாடத்தட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் லூக்காஸ். இவரது மகன் கிறிஸ்டோ செபாஸ்டின் (30). வெளிநாட்டில் பொறியாளராக பணிபுரிந்து வந்த செபாஸ்டின், கடந்த 24ஆம் தேதி சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில், குடும்பத்தினர் வெளியே சென்றிருந்தபோது வீட்டில் தனியாக இருந்த செபாஸ்டின் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள முன்றார்.

கன்னியாகுமரி அருகே பொறியாளர் தூக்கிட்டு தற்கொலை!

வீட்டிற்கு திரும்பிய உறவினர்கள், செபாஸ்டின் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து, உடனடியாக அவரை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு, செபாஸ்டினை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டாதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து லூக்காஸ் புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பெற்றோர் திருமண ஏற்பாடு செய்து வந்த நிலையில், அது பிடிக்காததால் தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.