குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

 

குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

தென்காசி

தென்காசி அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அடுத்த கீழ அரியப்பபுரம் பகுதியை சேர்ந்தவர் கல்லுத்தியான். கூலி தொழிலாளி. இவருக்கு பேராட்சிசெல்வி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இதனிடையே கல்லுத்தியான் மது அருந்திவிட்டு வந்து அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

நேற்று முன்தினம் வழக்கம் போல் மதுபோதையில் வீட்டிற்கு வந்த அவர், மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளார். இதில் மனமுடைந்த பேராட்சி செல்வி வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உறவினர்கள் அளித்த தகவலின் பேரில் பாவூர்சத்திரம் போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து, உடலை தென்காசி அரசு மருத்துமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து பேராட்சிசெல்வி தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.