குடும்ப தகராறில் மின்வாரிய ஊழியர் கொலை… மனைவி, மகன் கைது…

 

குடும்ப தகராறில் மின்வாரிய ஊழியர் கொலை…  மனைவி, மகன் கைது…

தேனி

தேனி அருகே மின்வாரிய ஊழியரை கொலைசெய்து விட்டு, நாடகமாடிய மனைவி மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை சேர்ந்தவர் சின்ன கருப்பையா(50) . மின்வாரிய ஊழியரான இவருக்கு விஜயா என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். பணி காரணமாக சின்ன கருப்பையா கூடலூர் அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் மனைவி மற்றும் மூத்த மகன் விஜய்(21) ஆகியோருடன் வசித்து வந்தார்.

இதனிடையே மதுப் பழக்கத்திற்கு அடிமையான சின்ன கருப்பையா, மது அருந்திவிட்டு வந்து அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வழக்கம்போல் மது அருந்திவிட்டு வந்த அவர், விஜயாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். அதனை விஜய் தட்டிக்கேட்டதால், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

குடும்ப தகராறில் மின்வாரிய ஊழியர் கொலை…  மனைவி, மகன் கைது…

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறிய நிலையில், விஜய் கழுத்தை நெறித்ததில் சின்ன கருப்பையா மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதனை மறைத்து, அவர்கள் உடலை தேவதானப்பட்டிக்கு எடுத்துச் சென்று இறுதிச் சடங்குகள் மேற்கொண்டனர். கருப்பையாவின் கழுத்தில் காயங்கள் இருப்பதை பார்த்து சந்தேகமடைந்த உறவினர்கள், இது குறித்து கூடலூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார், இருவரையும் பிடித்து விசாரணை செய்தபோது சின்ன கருப்பையா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து, இருவரையும் கைதுசெய்த போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.