கடன் தொல்லையால் விவசாயி தூக்கிட்டு தற்கொலை!

 

கடன் தொல்லையால் விவசாயி தூக்கிட்டு தற்கொலை!

கோவை

கோவையில் கடன்தொல்லை காரணமாக விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகேயுள்ள தீனம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன்(29). விவசாயி. இவருக்கு திருமணமாகி கோகிலா என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில், ஆனந்தன் குடும்ப செலவுக்காக பலரிடமும் கடன் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் பணத்தை திருப்பி செலுத்ததால், கடன் கொடுத்தவர்கள் ஆனந்தனிடம் தொடர்ந்து கேட்டு வந்துள்ளனர்.

கடன் தொல்லையால் விவசாயி தூக்கிட்டு தற்கொலை!

இதனால் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்த ஆனந்தன், நேற்று தற்கொலை செய்துகொள்ளப் போவதாக தனது உறவினரிடம் போனில் தெரிவித்து விட்டு, தோட்டத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் சென்று பார்த்தபோது தோட்டத்தில் அவர் தூக்கில் சடலமாக தொங்கினார்.

தகவல் அறிந்து வந்த தொண்டாமுத்தூர் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கடன்தொல்லை காரணமாக இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.