முசிறியில் கல்லூரி மாணவர் அடித்துக்கொலை… போலீசார் விசாரணை…

 

முசிறியில் கல்லூரி மாணவர் அடித்துக்கொலை… போலீசார் விசாரணை…

திருச்சி

முசிறி காவிரி ஆற்றங்கரையில் கல்லூரி மாணவரை அடித்துக்கொன்று சடலத்தை வீசி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் முசிறி சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகன் கவுதம்(19). இவர் முசிறியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்து சென்ற கவுதம் மீண்டும் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது

இதனால் அவரை பெற்றோர் தேடிய நிலையில், முசிறி காவிரி ஆற்றங்கரை பகுதியில் தலை மற்றும் உடலில் தாக்கப்பட்டு, சடலமாக கிடந்தார். இதனை கண்ட அந்த பகுதி மக்கள் முசிறி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

முசிறியில் கல்லூரி மாணவர் அடித்துக்கொலை… போலீசார் விசாரணை…

தகவலின் பேரில் முசிறி டிஎஸ்பி பிரமானந்தம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து முசிறி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவர் முன்விரோதம் காரணமாக அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என விசாரித்து வருகின்றனர். இதனிடையே கல்லூரி மாணவர் படுகொலை செய்யப்பட்டதால் முசிறியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.