திருச்சியில் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை!

 

திருச்சியில் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை!

திருச்சி

திருச்சி கே.கே.நகர் அருகே பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி கே.கே.நகர் அடுத்துள்ள எல்.ஐ.சி காலனி பகுதியை சேர்ந்தவர் சத்ய நாராயணன். இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அனுராதா (45). இவர் தனது மாமியாருடன் திருச்சியில் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த செவ்வாய் கிழமை அன்று இரவு உணவு அருந்தி விட்டு இருவரும் தூங்க சென்றுள்ளனர்.

திருச்சியில் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை!

தொடர்ந்து, புதன் கிழமை மாமியார் எழுந்து பார்த்தபோது அனுராதாவை காணவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அனுராதாவை தேடி வந்துள்ளார். அப்போது, வீட்டின் அருகில் இருந்த கிணற்றில் அனுராதா விழுந்து கிடந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, அந்த பகுதி மக்கள் கே.கே.நகர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இருந்த அனுராதாவை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனுராதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து, புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.