குழந்தை இல்லாத ஏக்கத்தில் கூலி தொழிலாளி தற்கொலை!

 

குழந்தை இல்லாத ஏக்கத்தில் கூலி தொழிலாளி தற்கொலை!

தேனி

தேனி மாவட்டம் கம்பத்தில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தேனி மாவட்டம் கம்பம் நாட்டாண்மை அழகிரி தெருவை சேர்ந்தவர் பிரபாகரன்(32). கூலி தொழிலாளி. இவருக்கும், கோவை மாவட்டம் பொள்ளாச்சி மீனாட்சிபுரத்தை சேர்ந்த ரஞ்சிதாவு என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டிற்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதன் காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

குழந்தை இல்லாத ஏக்கத்தில் கூலி தொழிலாளி தற்கொலை!

இதனால் ரஞ்சிதா கணவருடன் கோபித்துக் கொண்டு, தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். மேலும், பிரபாகரன் சேர்ந்து வாழ அழைத்தபோது, அதற்கு ரஞ்சிதா மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் வாழ்வில் விரக்தியடைந்த பிரபாகரன் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செயது கொண்டார்.

தகவல் அறிந்த கம்பம் வடக்கு போலீசார், பிரபாகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இதுகுறித்து புகாரி பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.