ராசிபுரம் அருகே திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

 

ராசிபுரம் அருகே திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

நாமக்கல்

ராசிபுரம் அருகே திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள கட்டனாச்சாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமசந்திரன். இவர், ராசிபுரம் பேருந்து நிலையத்தில் சைக்கிள் ஸ்டாண்ட் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சேலம் மாவட்டம் பனைமரத்துப்பட்டியை சேர்ந்த சத்யா(33) என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

ராசிபுரம் அருகே திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

இந்த நிலையில், திருமணம் ஆனது முதல் தம்பதியினர் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட சத்யா, நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் ராசிபுரம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து சத்யாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், திருமணமான 8 மாதத்தில் மணப்பெண் உயிரிழந்ததால் வரதட்சணை கொடுமை காரணமா? என ராசிபுரம் உதவி ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.