திருவள்ளூரில் மேலும் 469 பேருக்கு கொரோனா : தொற்று பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்கும் அபாயம்!

 

திருவள்ளூரில் மேலும் 469 பேருக்கு கொரோனா : தொற்று பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்கும் அபாயம்!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,979 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,70,693 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 78 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

திருவள்ளூரில் மேலும் 469 பேருக்கு கொரோனா : தொற்று பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்கும் அபாயம்!

இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,481 ஆக அதிகரித்துள்ளது. இதனால் சென்னை உள்பட சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் 85,859 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.

திருவள்ளூரில் மேலும் 469 பேருக்கு கொரோனா : தொற்று பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்கும் அபாயம்!

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 469 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 9,579 ஆக அதிகரித்துள்ளது. இதனால் திருவள்ளூரில் கொரோனா தொற்று 10 ஆயிரத்தை நெருங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.