அயோத்தி அடிக்கல் நாட்டு விழா: பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீசாருக்கு கொரோனா பரிசோதனை!

 

அயோத்தி அடிக்கல் நாட்டு விழா: பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீசாருக்கு கொரோனா பரிசோதனை!

பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீசாருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வருகிற 5ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல்நாட்டு விழா நடக்கிறது. இதில் மொத்தம் 200 பேருக்கு பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வேறு யாரும் விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும் என்பதால் வீட்டிலிருந்தே இதை கண்டு களிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அயோத்தி அடிக்கல் நாட்டு விழா: பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீசாருக்கு கொரோனா பரிசோதனை!

இதில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தலைவர் நிர்த்திய கோபால் தாஸ் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர். அடிக்கல் நாட்டு விழா சரியாக 12.30க்கு தொடங்கி 12.40க்குள் நடைபெறும். முன்னதாக 11.15க்கு மோடி விழா நடைபெறும் இடத்துக்கு வரவுள்ளார்.

அயோத்தி அடிக்கல் நாட்டு விழா: பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீசாருக்கு கொரோனா பரிசோதனை!

இந்நிலையில் அயோத்தி அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீசாருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநில கமாண்டோ போலீசார் 200 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.