தேனியில் மேலும் 107 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

 

தேனியில் மேலும் 107 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,549 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,56,369 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 82,128 ஆக உயர்ந்துள்ளது.இருப்பினும் சென்னையை காட்டிலும் மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று தற்போது வேகம் எடுத்து வருகிறது.

தேனியில் மேலும் 107 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

இந்நிலையில் தேனியில் மேலும் 107 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அம்மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,160 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 827 ஆக உள்ள நிலையில் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.