தேனியில் 2 ஆயிரத்தை தாண்டியது கொரோனா தொற்று பாதிப்பு!

 

தேனியில் 2 ஆயிரத்தை தாண்டியது கொரோனா தொற்று பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,496 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தேனியில் 2 ஆயிரத்தை தாண்டியது கொரோனா தொற்று பாதிப்பு!

இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,51,820 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 80,961 ஆக உயர்ந்துள்ளது.இருப்பினும் சென்னையை காட்டிலும் மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று தற்போது வேகம் எடுத்து வருகிறது.

தேனியில் 2 ஆயிரத்தை தாண்டியது கொரோனா தொற்று பாதிப்பு!

இந்நிலையில் தேனி மாவட்டத்தில் மேலும் 130 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 2,105 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை  2 ஆயிரத்தை தாண்டியது. தேனி மாவட்டம் கூடலூரில் இன்று முதல் இந்த மாத 27 ஆம் தேதி வரை கொரோனொவை கட்டுப்படுத்தும் விதமாக முழுகடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.