விருப்பமின்றி திருமணம்… வேதனையில் புதுமணப்பெண் தற்கொலை…

 

விருப்பமின்றி திருமணம்… வேதனையில் புதுமணப்பெண் தற்கொலை…

கோவை

ஆனைமலையில் திருமணமான 20 நாளில் புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நெல்லாகோட்டை கிராமத்தை சேர்ந்த பாண்டியராஜன் என்பவரது மகள் சங்கீதா (23). இவருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு கோவை மாவட்டம் ஆனைமலை அடுத்த ஓடையாகுளம் பகுதியை சேர்ந்த மகாலிங்கம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தனது விருப்பமின்றி பெற்றோர் திருமணம் செய்து வைத்ததால் சங்கீதா, அவர்களுடன் பேசாமல் இருந்து வந்துள்ளார்.

விருப்பமின்றி திருமணம்… வேதனையில் புதுமணப்பெண் தற்கொலை…

மேலும், மிகுந்த மனவேதனையுடன் காணப்பட்டு வந்த அவர், வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து, அவரது உறவினர்கள் அளித்த தகவலின் பேரில் ஆனைமலை போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, திருமணமாகி 20 நாளில் மணப்பெண் தற்கொலை செய்துகொண்டதால், இந்த சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.