15 காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் சிறப்பு பதக்கம் அறிவிப்பு!

 

15 காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் சிறப்பு பதக்கம் அறிவிப்பு!

74 ஆவது சுதந்திர தின விழா நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது சமூக இடைவெளி, முகக கவசம் அணிதல் உள்ளிட்டவை அவசியம் பின்பற்ற வேண்டும் என கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறை வழிக்காட்டுதல்களை மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தியுள்ளன.

15 காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் சிறப்பு பதக்கம் அறிவிப்பு!

இந்நிலையில் தமிழகத்தில் 74 வது சுதந்திர தினத்தையொட்டி முதல்வர் பழனிசாமி நாளை கோட்டையில் காலை 8.45 மணிக்கு கொடியேற்றுகிறார். இந்த நன்னாளில் தமிழக காவல்துறையை சேர்ந்த 15 காவலர்களுக்கு முதல்வர் சிறப்பு பதக்கம் வழங்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

15 காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் சிறப்பு பதக்கம் அறிவிப்பு!

நெல்லை சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையர் சரவணன், முன்னாள் காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், மத்திய குற்றப் பிரிவு தலைமை காவலர் ஜெகன்நாத்,சேலம் எஸ் பி தீபா கணிகர், மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் நாகஜோதி ஆகியோருக்கும் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. விருது பெறுவோருக்கு தலா 8 கிராம் எடை கொண்ட தங்க பதக்கமும், 25 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.