செங்கல்பட்டில் மேலும் 132 பேருக்கு கொரோனா உறுதி: அதிகரிக்கும் பாதிப்பு!
Jul 15, 2020, 11:48 IST1594793910000
தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று மட்டும் புதிதாக 4,526 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,47,324 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 79,662 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சென்னையை காட்டிலும் மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று தற்போது வேகம் எடுத்து வருகிறது.
இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 132 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,674 ஆக உயர்ந்துள்ளது.