மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில், சிமெண்ட் ஆலை ஊழியர் பலி!

 

மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில், சிமெண்ட் ஆலை ஊழியர் பலி!

அரியலூர்

அரியலூர் அருகே மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் சிமெண்ட் ஆலை ஊழியர் உயிரிழந்தார்.

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகேயுள்ள வெளிப்பிரிங்கியம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்(31). இவர் தனியார் சிமெண்ட் ஆலையில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.

மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில், சிமெண்ட் ஆலை ஊழியர் பலி!

இந்த நிலையில், கார்த்திக் நேற்று பணிக்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றுகொண்டிருந்தார். ரெட்டிப்பாளையம் பகுதியில் உள்ள வளைவில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த விக்கரமங்கலம் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கா அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.