லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஆந்திராவை சேர்ந்த ஓட்டுநர் பலி!

 

லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஆந்திராவை சேர்ந்த ஓட்டுநர் பலி!

ஈரோடு

பெருந்துறை அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதிகொண்ட விபத்தில் ஆந்திராவை சேர்ந்த ஓட்டுநர் உயிரிழந்தார்.

கேரள மாநிலத்தில் இருந்து ஆந்திராவுக்கு மரப்பலகைகள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரியை ஆந்திராவை சேர்ந்த மல்லேஸ்வர் என்பவர் ஓட்டிச்சென்றார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள காஞ்சிகோவில் பிரிவு அருகே சென்றபோது, மதுரையில் இருந்து எதிர் திசையில் வந்த மற்றொரு லாரியின் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்திற்கு உள்ளானது.

லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஆந்திராவை சேர்ந்த ஓட்டுநர் பலி!

இதில் மல்லேஸ்வர் மற்றும் மதுரையை சேர்ந்த ஓட்டுநர் வீரமணி ஆகியோர் பலத்த காயமடைந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் வீரமணியை உடனடியாக மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், லாரிக்குள் சிக்கிக்கொண்டு மல்லேஸ்வரை மீட்க முடியாததால் பொக்லைன் இயந்திரம் வர வழைக்கப்பட்டு, பின்னர் மல்லேஸ்வர் மீட்கப்பட்டார்.

தொடர்ந்து, போலீசார் அவரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த நிலையில், மருத்துவமனை செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து பெருந்துறை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.