இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழப்பு!

 

இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழப்பு!

தென்காசி

தென்காசி அருகே சாலையில் பழுதாகிய இருசக்கர வாகனம் மீது மற்றொரு இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகேயுள்ள கீழ சுரண்டை பகுதியை சேர்ந்த காசிமணி என்பவரது மகன் முத்துக்குமார்(30). இவர் பணிக்கு சென்றுவிட்டு நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். சுரண்டை அருகே வந்தபோது திடீரென வாகனம் பழுதானதால், அதனை சாலையில் தள்ளிக்கொண்டு நடந்து சென்றார்.

இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழப்பு!

அப்போது, ஆயக்குடியில் இருந்து எதிர் திசையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த சிவா(22) என்பவரது வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து முத்துக்குமாரின் மீது மோதியது. இந்த விபத்தில், முத்துக்குமார் மற்றும் சிவா ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு தென்சாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். விபத்து குறித்து சுரண்டை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.