குமரி அருகே குளத்தில் சொகுசு கார் கவிழ்ந்து விபத்து; தந்தை – மகள் பலி!

 

குமரி அருகே குளத்தில் சொகுசு கார் கவிழ்ந்து விபத்து; தந்தை – மகள் பலி!

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் குளத்தில் கவிழ்ந்து விபத்தில் தந்தை, மகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள சிதறால் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் தனது மகள்கள் ஷாமிலி(21), ஷாலினி(20) ஆகியோருடன், ஈத்தாமொழியில் உள்ள கோவிலுக்கு சொகுசு காரில் சென்று கொண்டிருந்தார். இன்று காலை கருங்கல் அருகேயுள்ள செல்லம்கோணம் பகுதியில் சென்றபோது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த செம்மண் குளத்திற்குள் பாய்ந்து மூழ்கியது.

குமரி அருகே குளத்தில் சொகுசு கார் கவிழ்ந்து விபத்து; தந்தை – மகள் பலி!

இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து தண்ணீரில் குதித்து ஒரு பெண்ணை மீட்டனர். மற்ற இருவரும் சுமார் 15 அடி ஆழ தண்ணீருக்குள் காருடன் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், அந்த பகுதி மக்களுடன இணைந்து குளத்தில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 1 மணிநேர போராட்டத்துக்கு பின் தந்தை – மகள் இருவரையும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டனர். தொடர்ந்து, உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.