கிணற்றில் மூழ்கி ப்ளஸ் 1 மாணவர் பலி!

 

கிணற்றில் மூழ்கி ப்ளஸ் 1 மாணவர் பலி!

தென்காசி

கடையநல்லூர் அருகே கிணற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி பிளஸ் 1 மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள மேலகலங்கல் பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மகன் பேச்சிமுத்து (17). இவர் அரசுப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், பேச்சிமுத்து சிவராத்திரியை முன்னிட்டு கடையநல்லூர் அருகேயுள்ள சொக்கம்பட்டி பெரியநாயகம் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார்.

கிணற்றில் மூழ்கி ப்ளஸ் 1 மாணவர் பலி!

பின்னர், அங்குள்ள கிணற்றில் நண்பர்களுடன் சேர்ந்து குளித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி மாயமாகினார். இதுகுறித்து, அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், கடையநல்லூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணி நேர தேடலுக்கு பின்னர் அவர்கள் பேச்சிமுத்துவை சடலமாக மீட்டனர். இந்த சம்பவம் குறித்து சொக்கம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.