×

திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 333 பேருக்கு கொரோனா தொற்று: செங்கல்பட்டிலும் குறையாத கொரோனா!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,680 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை1,30,261ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் திருவள்ளூரில் மேலும் 333 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆவடி 69, திருவள்ளூர் 27, சோழவரம் , பூந்தமல்லி தலா 26 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 6, 408 ஆக அதிகரித்துள்ளது.
 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,680 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை1,30,261ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் திருவள்ளூரில் மேலும் 333 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆவடி 69, திருவள்ளூர் 27, சோழவரம் , பூந்தமல்லி தலா 26 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 6, 408 ஆக அதிகரித்துள்ளது.


அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 187 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7, 822 ஆக உயர்ந்துள்ளது.