திருவள்ளூர் மாவட்டத்தில் 6 ஆயிரத்தை எட்டியது கொரோனா பாதிப்பு.. அச்சத்தில் மக்கள்!

 

திருவள்ளூர் மாவட்டத்தில் 6 ஆயிரத்தை எட்டியது கொரோனா பாதிப்பு.. அச்சத்தில் மக்கள்!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகிக் கொண்டே செல்லும் நிலையில், திருவள்ளூர் மாவட்டத்திலும் பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் பூந்தமல்லி, திருவேற்காடு, மீஞ்சூர், பொன்னேரி உள்ளிட்ட இடங்களில் 209 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் 6 ஆயிரத்தை எட்டியது கொரோனா பாதிப்பு.. அச்சத்தில் மக்கள்!

பாதிக்கப்பட்ட அனைவரும் திருவள்ளூர், பூந்தமல்லி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் திருவள்ளூரில் 3 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 3062 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். வைரஸ் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அம்மாவட்ட மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையை முறையாக பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது.